என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவர் மீது தாக்குதல்"
- வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர் மீது தாக்குதல் நடந்தது.
- டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமாா(வயது33). இவரது மனைவி வைரமுத்து செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு சிவகாசி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் சாப்பிட வந்திருந்தார். இதைப்பார்த்த வைரமுத்து செல்வி மற்றும் அவரது உறவினர்கள் ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த வைரமுத்துசெல்வி உள்பட 3 பேர் ஜெயக்குமாரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது32). கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கலைசங்கரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.
சம்பவத்தன்று மாரீஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கலைசங்கர் மனைவியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு
- போலீசார் விசாரணை
ஆம்பூர் :
ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமணி ராஜசேகர், அ.ம.மு.க கட்சியை சேர்ந்த இவர், தனது ஊராட்சிக் குட்பட்ட 4-வது வார்டில் உள்ள தெருவில் 200 மீட்டர் தொலைவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைப்பதற்காக ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளான இளங்கோவன், குபேந்திரன் ஆகியோர் கழிவு நீர் கால்வாய் இப்பகுதியில் அமைக்ககூடாது என கூறி கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரமணியின் கணவர் ராஜசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை தாக்கியுள்ளனர்.படுகாயம் அடைந்த ராஜசேகரன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்